Movie : Arasa kattalai
music : Kvm
singer : Tms & p susheela
புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்று புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே….
அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
செவ்விதழை கண்ணால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன
புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே……
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்து கொண்டால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்து கொண்டால் என்ன
முத்தமழை என்றால் என்ன
சொர்கம் ஒன்று உண்டா என்ன
முத்தமழை என்றால் என்ன
சொர்கம் ஒன்று உண்டா என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதை தந்தால் என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதை தந்தால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே……
No comments:
Post a Comment