சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா (2)
உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...
முன்வைத்த காலை பின்வைப்பதென்ன நடுக்கம் பிறக்கின்றதா
இலைகள் அசையும் ஒலியில்கூட இதயம் துடிக்கின்றதா
அச்சத்தில் பாதி ஆசையில் பாதி...(2) பெண்மை நடக்கின்றதா
உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம்கூட சத்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா...தேகம் கொதிக்கின்றதா...
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...
கங்கையைத்தேடி காவிரி நடந்து கலக்க வாருகின்றதோ
...
காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுக்கின்றதோ
நதிகள் இரண்டும் தாகம் எடுத்து...(2) குடிக்க துடிக்கின்றதோ
காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை
பெண்மை சிலிர்க்கின்றதோ...பேச தவிக்கின்றதோ...
சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா
சந்திக்க துடித்தேன் பொன்மானெ...
No comments:
Post a Comment