Wednesday, July 28, 2010

காதல் வைபோகமே

படம் : சுவரில்லாத சித்திரங்கள்


பாடல் : கங்கை அமரன்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

இசை : சங்கர் கணேஷ்

வெளியான ஆண்டு : 1980

காதல் வைபோகமே

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடி கிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண் பாடுமே



காதல் வைபோகமே

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடி கிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண் பாடுமே



கோடை காலத்தில் தென்றல்

குளிரும் பெளர்ணமி திங்கள்

வாடை காலத்தில் கூடல்

விளையாடல் ஊடல்



வானம் தாலாட்டுப் பாட

மலைகள் பொன் ஊஞ்சல் போட

நீயும் என் கையில் ஆட

சுகம் தேட கூட



பூவில் மேடையமைத்து

பூவை உன்னை அணைத்தால்

கதகதப்பு துடிதுடிப்பு

இது கல்யாண பரபரப்பு



காதல் வைபோகமே

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடி கிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண் பாடுமே



எண்ணம் என்னென்ன வண்ணம்

இளமை பொன்னென்று மின்னும்

எங்கும் ஆனந்த ராகம்

புது தாகம் தாபம்



மேகலை பாடிடும் ராகம்

ராகங்கள் பாடிடும் தேகம்

தேகத்தில் ஊறிய மோகம்

சமபோகம் யோகம்



வாழ்ந்தால் உந்தன் மடியில்

வளர்த்தால் உந்தன் அருகில்

அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்

ஏழேழு ஜென்மம் எடுப்பேன்



காதல் வைபோகமே

காணும் நன்னாள் இதே

வானில் ஊர்கோலமாய்

ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து

ஆனந்த பண் பாடுமே



லல லால்ல லா லா ல

No comments:

Post a Comment