Wednesday, July 28, 2010

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

படம்: டவுன் பஸ்


இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்

இசை: கே.வி. மஹாதேவன்

பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி

ஆண்டு: 1955



சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை

விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை

விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே



பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்

பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது

பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்

பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது



சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை

விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?



தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது

தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா

தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா

தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது

வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது

வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்

வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்

வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது



சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை

விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

No comments:

Post a Comment