Wednesday, July 28, 2010

காற்று வாங்கப் போனேன்

படம்: கலங்கரை விளக்கம்


பாடல்: வாலி

பாடியது: டி.எம்.சௌந்திரராஜன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


காட்சி: (வாலி எழுதிய புத்தகத்திலிருந்து)

விஸ்வநாதன், வாலியிடம் சொன்னது: இது கதாநாயகன் பாடும் ஒரு சாதாரண

காதல் சிச்சுவேஷன்தான், இருப்பினும் அதுக்கு ஒரு நல்ல பல்லவியோட

ஆரம்பித்து பாட்டு எழுதினீங்கன்னா, இந்த வாட்ச், செயின், மோதிரம்

உங்களுக்கு" என்று சொல்லி எல்லாத்தையும் கழட்டி வைக்க.

வாயில் புகையிலையைப் போட்டுக் கொண்டு, வாலி இந்தப் பாட்டை எழுத,

எம்.எஸ்.வி, ஹார்மோனியப் பெட்டிமேல் இருந்த செயின், மோதிரம், வாட்சை

எடுத்து வாலி கையில் கொடுத்தார். உடனே வாலி அவற்றைத் திரும்பி அவரிடம்

கொடுத்து, எனக்குத் தேவை உங்கள் ஆசிர்வாதம் மட்டுமே என்றார்.




காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்



என் உள்ளம் என்ற ஊஞ்சல்

அவள் உலவுகின்ற மேடை

என் பார்வை நீந்தும் இடமோ

அவள் பருவம் என்ற ஓடை

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்



நடை பழகும் போது தென்..றல்

விடை சொல்லிக்கொண்டு போகும்

நடை பழகும் போது தென்றல்

விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும்

நெஞ்சை அள்..ளிக் கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும்

நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்



நல்ல நிலவு தூங்கும் நேரம்

அவள் நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும்

இந்த இதயம் தாங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும்

இந்த இதயம் தாங்கவில்லை

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்னவானாள்

நான் காற்று வாங்கப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

No comments:

Post a Comment