Friday, July 30, 2010

முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம்

திரைப்படம் : இராமன் அப்துல்லா


இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா

ஆண்டு : 1997



ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன

முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன

உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன

மனம் வேகுது மோகத்திலே

நோகுது தாபத்திலே



(முத்த...)





பெண்: காதல் வழிச் சாலையிலே

வேகத்தடை ஏதுமில்லை



ஆண்: நாணக்குடை நீ பிடித்தும்

வேர் வரைக்கும் சாரல் மழை



பெண்: தாகம் வந்து பாய் விரிக்க

தாவணிப் பூ சிலிர்க்கிறதே



ஆண்: மோகம் வந்து உயிர் குடிக்க

கை வளையல் சிரிக்கிறதே



பெண்: உந்தன் பேரைச் சொல்லித்தான்

காமன் என்னைச் சந்தித்தான்



ஆண்: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்



பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன

முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன

உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன

மனம் வேகுது மோகத்திலே

நோகுது தாபத்திலே





ஆண்: கனவு வந்துக் காத்திருக்கு

தூங்கிக் கொள்ள மடி இருக்கா



பெண்: ஆசை இங்கு பசித்திருக்கு

இளமைக்கென்ன விருந்திருக்கா



ஆண்: பூவைக்கிள்ளும் பாவனையில்

சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்



பெண்: மச்சம் தொடும் தோரணையில்

முத்தம் தர தீண்டுகிறாய்



ஆண்: மின்னல் சிந்தி சிரித்தாய்

கண்ணில் என்னைக் குடித்தாய்



பெண்: தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

No comments:

Post a Comment