Friday, July 30, 2010

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

song : muthu chippikkullae


film : kuzhandhai uLLam

singers : SPB, P Suseela

music :kOthandapAni

lyric :kannadAsan


முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு

மோனத்தில் ஆந்தது சுவைகொண்டு



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்பத் தேனுண்டு



தலைமகன் செய்தது சோதனையோ

தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ

கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு



முத்தமிட்ட இதழே பாலாக

முன்னிடை மெலிந்து நூலாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கன்னங்கள் இரண்டும் விலையாக



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு



தேன் தரும் நிலவே நீ சாட்சி

தென்றல் காற்றே நீ சாட்சி

வானும் நிலவும் உள்ளவரை

வளரட்டும் காதல் அரசாட்சி

வளரட்டும் காதல்...அரசாட்சி



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு

No comments:

Post a Comment