song : muthu chippikkullae
film : kuzhandhai uLLam
singers : SPB, P Suseela
music :kOthandapAni
lyric :kannadAsan
முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்ப தேனுண்டு
முதல் நாள் மயக்கம் வரக்கண்டு
மோனத்தில் ஆந்தது சுவைகொண்டு
முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேனுண்டு
தலைமகன் செய்தது சோதனையோ
தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ
கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ
கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ
முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்ப தேனுண்டு
முத்தமிட்ட இதழே பாலாக
முன்னிடை மெலிந்து நூலாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கட்டி வைத்த கூந்தல் அலையாக
கன்னங்கள் இரண்டும் விலையாக
முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்ப தேனுண்டு
தேன் தரும் நிலவே நீ சாட்சி
தென்றல் காற்றே நீ சாட்சி
வானும் நிலவும் உள்ளவரை
வளரட்டும் காதல் அரசாட்சி
வளரட்டும் காதல்...அரசாட்சி
முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்ப தேனுண்டு
No comments:
Post a Comment