அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
புது சங்கமம்...சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்
அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடு தான்...தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே
அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும்...ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
No comments:
Post a Comment