Friday, July 30, 2010

மா தவம் ஏன் மாதவனே

ஆ ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ ஆ...


மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



செவ்விதழாய் இது தேன்கனி கோவை...ஆ ஆ ஆ ஆ... (2)

தேவா உன் வானமுதம்...(2)

சேயிழை நூலிடை பின்னல் தோரணம் காமனின் கோயிலில் நானே கோபுரம்

தேனூறும் ஆகாய கங்கை சலசலசலவென வருகிறதே

வழிகிறதே...ஆ ஆ நதியினில் நீராடு...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ ஆ ஆ ஆ...(2)

நானங்கே தங்கநிலா...ம் ம் ம் ம்...

ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம் யாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ...ஆ

பிரம்மாவின் கைவண்ணம் நானே இளமையில் ஒரு மயில் தனிமையிலே

தவிக்கிறதே...ஏ ஏ ஒருமுறை பாராயோ...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



அந்தி மாகலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே இசைவிலே

இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இதுதானே

தத்தஜம் ததகிடஜம் தக தகதீம்த தகதீம்த தகதாம்தக

தகிட திகிட தொம்கிட நம்கிட தகதிமி

தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிடதாம்

விழியிலே மரகதம் இதழ்கள் சோமபாணம்

தகிடதாம் தகிடதாம் தகிடதாம்த

தரிகிடதாம் தரிகிடதாம் கிடதக தரிகிடதாம்

நித்தம் பரிமாற வரவா தலைவா

ரிம்ம ரிமபப மபநிநிபமப...ரிம்ம ரிமபப மபநிநிபமப

தாம்த தகதாம்த தகதீம் தகதாம்

இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடஜம்த நம்கிடஜம்

முகிலிலாத குழலும் உந்தன் உறவுதேடி அலையுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடதஜம்த நம்கிடதஜம்

...

தவமது கலைவது தெரிகிறது...அருள்கொடு மா தேவா...அருகினில் மாதே வா...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

http://music.cooltoad.com/music/song.php?id=298153

No comments:

Post a Comment