Wednesday, July 28, 2010

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

படம்: படகோட்டி


பாடல்: வாலி

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்: T.M.S

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்

யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்



மண்குடிசை வாசலென்றால்

தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழையென்றால்

வேளிச்சம் தர மறுத்திடுமா

உனக்காக.. ஒன்று.. எனக்காக.. ஒன்று

ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை



கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்

யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்



படைத்தவன் மேல் பழியும் இல்லை

பசித்தவன் மேல் பாவம் இல்லை

கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்

உழைத்தவர்கள் தெருவில் நின்றார்

பலர் வாட வாட.. சிலர் வாழ வாழ..

ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை



கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்

யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்



இல்லையென்போர் இருக்கையிலே

இருப்பவர்கள் இல்லையென்பார்

மடி நிறைய.. பொருளிருக்கும்

மனம் நிறைய இருளிருக்கும்

எது வந்த போதும்.. பொது என்று வைத்து..

வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்



கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்

யாருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்

No comments:

Post a Comment