Wednesday, July 28, 2010

மே மாதம் - மின்னலே நீ வந்ததேனடி

மின்னலே நீ வந்ததேனடி - என்

கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே



மின்னலே நீ வந்ததேனடி - என்

கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே



கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்

கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்

கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு

சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்

காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



மின்னலே நீ வந்ததேனடி - என்

கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே



பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு

பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு

பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா

வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர் இல்லையா - நான்

காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்

காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்



மின்னலே நீ வந்ததேனடி - என்

கண்ணிலே ஒரு காயமென்னடி

என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே

No comments:

Post a Comment