film : kalangalil aval vasantham
singers : SPB, Vani
lyric :
music : Vijayabaskar
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே
மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே
பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்துக்கிடப்பதில் என்ன லாபம்
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது
அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் உனக்கு தெரியாதா
அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
No comments:
Post a Comment