Friday, July 30, 2010

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

MOVIE : AMBIGAPATHI


MUSIC : RAMANATHAN G

SINGER : TMS

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே

மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா

பேதங்கள் பறந்தோடுதே.

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.



சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

தீபமாய் ஒளிவீசுதே கண்ணே

தீபமாய் ஒளிவீசுதே...

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மௌனமாய் நம்மை வாழ்துதே...கண்ணா

மௌனமாய் நம்மை வழ்த்துதே..

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே...கண்ணா..

மாநிலம் கொண்டாடுதே..



ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்

நீரோடு நீர் போல நாம் கூடுவோம்

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே

தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே

உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

? முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே (2)

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே

காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

No comments:

Post a Comment