படம்: காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஆசையெனும் மேடையிலே... ஆஆ
ஆடிவரும் வாழ்வினிலே... ஏஏ
ஆசையெனும் மேடையிலே ஆடிவரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்... ஓ .. ஆ ..
பாட்டு வரும் வெளியினிலே... ஏஏ
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
No comments:
Post a Comment