Wednesday, July 28, 2010

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

படம் - நீர்க்குமிழி

இசை - வி. குமார்

பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

பாடல் - கண்ணதாசன்



ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா



முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா

கண் மூடினால் காலில்லா கட்டிலடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்

பேசினோம் என்பதே தாய்மொழியாம்

மறந்தோம் என்பதே நித்திரையாம்

மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா



சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்

தீமைகள் செய்பவன் அழுகின்றான்

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா



வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாருமே நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

No comments:

Post a Comment