Music : K V Mahadevan
Lyric : Kannadasan
Singer : P Susheela
படம்:பணமா பாசமா
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம்...
நேற்று பார்த்த விழி
கேட்ட மொழி யாவும்
காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென
மாற்றி மாற்றி அலை மோதும்
நேற்று...
அம்மம்மா அம்மா
இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்
என்ன சுகமோ ???
மாறியது நெஞ்சம் ....
ஆடை தந்து தமிழ்வாடை தந்து
மணமேடை வந்தவனைக் கண்டு
ஆசை முந்திவர நாணம் பிந்திவர
பேசி பார்க்கும் நினைவுண்டு !
ஆடை தந்து...
அம்மம்மா அம்மா
இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ ???
மாறியது நெஞ்சம் ....
காவியத்தை மன ஓவியத்தில்
அவன் தூவி வைத்த விதமென்ன !
கண்ணில் பார்த்த படம்
நெஞ்சில் நிற்கும் விதம்
கடவுள் தந்த கலை என்ன !
காவியத்தை...
அம்மம்மா அம்மா
வண்ணக் கலையை கன்னி அடைய என்ன விலையோ ?
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ ???
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ !
No comments:
Post a Comment