Wednesday, July 28, 2010

மண்ணில் இந்த காதல் அன்றி

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ


எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா



மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ



வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி

தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்

கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்

அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்................



மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்

என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி

இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்

விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா



மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா



மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

No comments:

Post a Comment