Wednesday, July 28, 2010

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

படம் : வட்டத்துக்குள் சதுரம்


இசை : இளையராஜா

பாடல் : பஞ்சு அருணாசலம்

பாடியவர்கள் : பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி

நடிப்பு : சுமித்ரா , லதா, ஸ்ரீகாந்த்

வெளியான ஆண்டு : 1978


இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்

மனம் போல் வாழ்வோம் துணை நீ

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்



ஓடுது ரயில் பாதை மனம் போலவே

பாடுது குயில் அங்கே தினம் போலவே

மா மரம் பூ பூத்து விளையாடுது

காடெங்கும் புது வாசம் பரந்தோடுது

பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்

புதுமைகள் காண்போம் என்னாளுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்



தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்

வசந்த்தின் மலராக மறு பாதி நீ

காற்றினில் ஒலியாக வருவேனடி

கனவுக்குள் நினைவாக வருவாயடி

நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்

கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்



ஓடமும் நீரின்றி ஓடாதம்மா

நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா

தோழமை உறவுக்கு ஈடேதம்மா

நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா

உனக்கென நானும் எனக்கென நீயும்

உலகினில் வாழ்வோம் என்நாளுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்



ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்

மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்

இரு மனம் அன்பாலே ஒன்றானது

நேசத்திலே உள்ளம் பண்பாடுது

பறவைகள் போலே பறந்திடுவோம்

மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்

மனம் போல் வாழ்வோம் துணை நீ

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

No comments:

Post a Comment