Wednesday, July 28, 2010

விடுகதையா......... இந்த வாழ்க்கை

படம் - முத்து


பாடியவர் - ஹரிஹரன்

இசை - ஏ.ஆர்.ரகுமான்

விடுகதையா......... இந்த வாழ்க்கை

விடை தருவார்......... யாரோ



எனது கை என்னை அடிப்பதுவோ

எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ

அழுது அறியாத என் கண்கள்

ஆறு குளமாக மாறுவதோ



ஏன் என்று கேட்கவும் நாதியில்லை

ஏழை என் நீதிக்குக் கண் உண்டு பார்வை இல்லை

பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்

காம்பினில் விசமென்ன கறக்கவா முடியும்

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்

நான் செய்த தீங்கு என்ன? நான் செய்த தீங்கு என்ன?



விடுகதையா இந்த வாழ்க்கை

விடை தருவார் யாரோ



வந்து விழுகின்ற மழைத்துளிகள்

எந்த இடம் சேரும் யார் கண்டார்

மனிதர் கொண்டாடும் உறவுகளோ

எந்த மனம் சேரும் யார் கண்டார்



மலைதனில் தோன்றுது கங்கை நதி

அது கடல் சென்று சேர்வது கால விதி

இவனுக்கு இவளென்று எழுதிய கணக்கு

கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு

உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்

இரண்டும் தீர்வதெப்போ...? இரண்டும் தீர்வதெப்போ...?



விடுகதையா இந்த வாழ்க்கை

விடை தருவார் யாரோ



உனது ராஜாங்கம் இதுதானே

ஒதுங்கக் கூடாது நல்லவனே

தொண்டுகள் செய்ய நீ இருந்தால்

தொல்லை நேராது தூயவனே!



கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்

இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்

காவியங்கள் உனைப் பாடக் காத்திருக்கும் பொழுது

காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்

நாங்கள் போவதெங்கே....? நாங்கள் போவதெங்கே....?

No comments:

Post a Comment