Wednesday, July 28, 2010

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

Movie : Aayriaththil oruvan


music : Viswanathan – ramamurthy

singer : Tms



அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்



லல்லா லா ல. லல்லா லா ல.

லல்லா லா ல. லல்லா லா ல.



காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்



………..அதோ அந்த பறவைபோல……………..



தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறு பாதை போகவில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்



……….அதோ அந்த பறவை போல………

No comments:

Post a Comment