Wednesday, July 28, 2010

நாணமோ இன்னும் நாணமோ

Movie : Aayriaththil oruvan


music : Viswanathan – ramamurthy

singers : Tms & p susheela


நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

ஓஓ…ஓ.. நாணமோ இன்னும் நாணமோ

தன்னை நாடும் காதலன் முன்னே

திருநாளை தேடிடும் பெண்மை

நாணுமோ…. நாணுமோ…

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..



தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

ஆடையில் ஆடுது வாடையில் வாடுது

ஆனன்த வெள்ளத்தில் நீராடுது

அது எது?

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

காதலன் பெண்ணிடம் தேடுவது

காதலி கண்களை மூடுவது

அது எது?



நாணமோ …. நாணுமோ…

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ … நாணமோ..

No comments:

Post a Comment