Wednesday, July 28, 2010

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

பாடல் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ


திரைப் படம் : பார்த்தால் பசி தீரும்

பாடியவர் : பி .சுசிலா

இசை : எம் .எஸ் .விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

நடிப்பு : சரோஜா தேவி



யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்கின்றார் ஒ ஒ ஒ ஒ ஓ

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு

எங்கே மயங்கி நின்றாரோ



யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ



கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ

அதில் கை கலந்து காதல் புரிவாரோ

கட்டவிழ்ந்து கண் மயங்க்குவாரோ

அதில் கை கலந்து காதல் புரிவாரோ

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ

இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ

இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

தூர நின்று ஜாடை புரிவாரோ



எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு

எங்கே மயங்கி நின்றாரோ

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ



ஊரறிய மாலையிடுவாரோ

இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ

ஊரறிய மாலையிடுவாரோ

இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ

சீர் வரிசை தேடி வருவாரோ

இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

சீர் வரிசை தேடி வருவாரோ

இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

சின்ன இடை எண்ணி வருவாரோ



எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு

எங்கே மயங்கி நின்றாரோ

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஒ ஒ ஒ ஓ

No comments:

Post a Comment