Movie : Mahakavi kalidhas
music : Kvm
singer : K b sundarambal
lyrics : Kannadhaasan
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றாது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்
கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
No comments:
Post a Comment