Wednesday, July 28, 2010

இது காதலின் சங்கீதம்

படம்: அவள் வருவாளா


இசை: தேவா

பாடியவர்: ஜெயசந்திரன்


இது காதலின் சங்கீதம்

புது குங்கும சந்தோஷம்

மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்

மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

(மங்கல..)



ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது

எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது

தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே

சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது

நிலவினை கிரகணம் தீண்டியது

மறூபடி பௌர்ணமி தோன்றியது

விதியும் புதியது கதையும் புதியது

காலத்தின் தீர்ப்பு இது

தெய்வத்தின் சேர்ப்பு இது

(இது..)



ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை

புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை

பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறூப்பதில்லை

பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை

பெண்மையை காட்டிலும் தேய்வமில்ல

அத்தை கண்களில் அன்னை தோன்றினாள்

தோன்றினும் மாகாளி அவள் பரிசு இந்த பொன் தாலி

(இது..)

No comments:

Post a Comment