Movie : Mahakavi kaalidhas
singer : K b sundrambal
lyrics : Kannadaasan
music : K v m
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விளலாகுமா…… மகனே
சந்தனம் சேராகுமா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
பல்லக்கு பரிவாரம் படையுடன் முடிசூடல்
சொல்லுக்கு விலையாகுமே….. மகனே உன்
தோளுக்குள் புவி ஆடுமே
ஊருக்கு கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்கு கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெரும் கவி வாடுமே……. மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது.. அதில் தான்
சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா…மகனே
என் அருகினில் இருப்பாயடா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெறும் கவி மன்னனே.. உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்
No comments:
Post a Comment