MOVIE : KONJUM SALANGAI
MUSIC : S M SUBBAIAH NAIDU
SINGER : JANAKI S
( Gemini : சாந்தா உட்கார். ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா
saavithiri : என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்………
Gemini : தேனோடு கலந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல், இந்த சிங்காரவேலன்
சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்.
பாடு… பாடு சாந்தா.. ம்ம்..பாடு.. )
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
அருள் சீராடும் மார்போடு? வா…
சிங்கார வேலனே தேவா
சிங்கார வேலனே தேவா
செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா
செந்தமிழ் தேவனே கேளாய்
செந்தமிழ் தேவனே கேளாய்
இன்று சிறை மீட்டு குறை தீர்க்கவே வா..
சிங்கார வேலனே தேவா
அருள் சிங்கார வேலனே தேவா
No comments:
Post a Comment