Monday, August 9, 2010

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா

படம்: மெல்ல திறந்தது கதவு


இசை: இளையராஜா

பாடியவர்: சித்ரா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா


குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா

குக்கூ குக்கூ குக்கூ

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு

இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும்..)



மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா

மழ மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா

என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு

மச்சான் நான் மெட்டெடுப்பேன்

உன்னை தான் கட்டி வைப்பேன்

சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா

உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளையா

(குழலோதும்..)



கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா

கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா

(கண்ணா..)

வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்

பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு

மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா

விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

(குழலூதும்..)

No comments:

Post a Comment