Monday, August 9, 2010

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

படம்: 16 வயதினிலே


இசை: இளையராஜா

பாடியவர்: S ஜானகி

 
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே


என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே

நீ கொஞ்சம் சொல்லாயோ

(செந்தூரப்பூவே..)



தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்

கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்

கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே

தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே..)



நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே

கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே

மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்

காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்

வண்ணப்பூவே தென்றல் காற்றே

என்னைத்தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே..)

No comments:

Post a Comment