Friday, August 6, 2010

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டு: 1975



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்

மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது

அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா

கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

No comments:

Post a Comment