Monday, August 9, 2010

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

படம்: மஹாதேவி


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டு: 1957



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்

எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்

ஓ... ஓ.. ஓ..

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்

வெந்திடும் தோட்டக் காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்

விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்

அழகைக் குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்

குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ

No comments:

Post a Comment