Friday, August 6, 2010

மருதமலை மாமணியே முருகய்யா

song - maruthamalai maamaNiyE

singer - madurai somu

lyrics - kaNNadasan

MD - kunnakkudi vaidyanathan
 
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?


கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை



மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா



(மருதமலை)



தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா



(மருதமலை)



கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ..



(மருதமலை)





சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்



பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா



(மருதமலை)

No comments:

Post a Comment