Monday, August 9, 2010

எத்தனை கோடி பணமிருந்தாலும்

படம் : அன்பு எங்கே


குரல் : சுசீலா

பாடல் : கண்ணதாசன்

இசை : வேதா



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே



உத்தமமான மனிதர்களைத்தான்

உலகம் புகழுது ஏட்டிலே

உலகம் புகழுது ஏட்டிலே



அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு

ஆடிக்கொண்டே நுழைவதை

அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து

ஆர்ப்பாட்டங்கள் செய்வதை

அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்

வெட்கம் வருவது இல்லையா

சின்னையா நீ சொல்லையா



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே



அன்னமிட்டுத் தாலாட்டி

ஆசையோடு வளர்த்தாள் - அந்த

அன்னையரின் எண்ணம் தன்னைக்

கனவினிலே வளர்த்தே

முன்னவர் போல பெயரெடுத்து

முறையோடு வாழும்

முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்

துணை புரிவேன் நானும்



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

No comments:

Post a Comment