Monday, August 9, 2010

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

படம் : அயன்


பாடல் : நெஞ்சே நெஞ்சே

பாடிய‌வர்கள் : Harish Ragavendra,Mahathi


 
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே


நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...

அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்

என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







ஆண்: கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்

வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே



பெண்: அன்பே பேரன்பே நான் உன்னைச்சேராமல்

ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே



ஆண்: வெயிற்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்

பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்



பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்

உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







பெண்: கள்வா ஏ கள்வா நீ காதல் செய்யாமல்

கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே



ஆண்: காதல் மெய் காதல் அது பட்டுப்போகாதே

காற்று நம் பூமி தனை விட்டுப்போகாதே



பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்

ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாதே



ஆண்: ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே

கடல் மண்ணாய்ப் போனாலும் நம் காதல் மாறாதே



பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...



ஆண்: அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்



பெண்: உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

No comments:

Post a Comment