Friday, August 6, 2010

கதைகளை பேசும் விழி அருகே

படம் : அங்காடித்தெரு


பாடல்: கதைகள் பேசும்

பாடியவர்: பென்னி தயால், ஹம்ஷிக்கா

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆன்ட்னி.

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

 
கதைகளை பேசும் விழி அருகே


எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

(கதைகளை..)



ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்

கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்

வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

(கதைகளை..)



கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய நொடியல்லவா

கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை

ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை

வெறும் கரையில் படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

(கதைகளை..)



உனக்குள் தொடங்கி உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே

எந்தன் நாட்கள் விடிகிறதே

ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்

ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

(கதைகளை..)

No comments:

Post a Comment