Monday, August 9, 2010

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

ஆல்பம் : கிருஷ்ணகானம்


வரிகள் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே



பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே



குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

No comments:

Post a Comment