Friday, August 6, 2010

ஒரு நாளில் வாழ்க்கை என்ற..

படம்:- புதுப்பேட்டை

பாடல்:- நா. முத்துக்குமார்

இசை;- யுவன் ஷங்கர் ராஜா
 
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது


மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



ஹோஹோஹோ....ஓ....

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ....

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?



போர்களத்தில் பிறந்து விட்டோம்

வந்தவை போனவை வருத்தம் இல்லை

காட்டினிலே வாழ்கின்றோம்

முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டுனிலே நீ நடகயிலே

உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே

உனக்கு துணை என்று விளங்கிவிடும்



தீயோடு போகும் வரையில்

தீராது இந்த தனிமை....



கரை வரும் நேரம் பார்த்து

கப்பலில் காத்திருப்போம்

எரிமலை வந்தால் கூட

ஏறி நின்று போர் தொடுப்போம்...ஓஹோஹோ....



அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே

இங்கும் எதுவும் நிலை இல்லை கரைகிரதே

மனம் வெட்ட வெளியிலே அலைகிரதே

அந்த கடவுளை கண்டால்?...ஒஹோஹோ....



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



அது எனக்கு இது உனக்கு

இதயங்கள் போடும் தனி கணக்கு



அவள் எனக்கு இவள் உனக்கு

உடல்களும் போடும் புதிர் கணக்கு



உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை

படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்

நல்லவன் யார் அட கெட்டவன் யார்

கடைசியிலே அவன் முடிவு செய்வான்



பழி போடு உலகம் இங்கே...

பலி ஆன உயிர்கள் எங்கே..



உலகத்தின் ஓரம் நின்று

அத்தனையும் பார்த்திருப்போம்

நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்



பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்

பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்

கதை முடியும் போக்கில் அதை முடித்துகொள்வோம்

மறு பிறவி வேண்டுமா?



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?

No comments:

Post a Comment