Monday, August 9, 2010

அண்ணன் ஒரு கோயில் என்றால்

அண்ணன் ஒரு கோயில் என்றால்


தங்கை ஒரு தெய்வம் அன்றோ

அன்று சொன்ன வேதமென்றோ

அதன் பெயர் பாசமென்றோ



பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனின்றி யாருமுண்டோ

அதன் பெயர் பாசமென்றோ



தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

கண் திறந்த நாள் முதலாய்

கை கொடுத்த தெய்வமென்றோ

அதன் பெயர் பாசமென்றோ



கண்ணன் பொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

அந்த மொழி எனக்கெதற்கு

அண்ணன் மொழி கீதையன்றோ

அதன் பெயர் பாசமென்றோ

No comments:

Post a Comment