அண்ணன் ஒரு கோயில் என்றால்
தங்கை ஒரு தெய்வம் அன்றோ
அன்று சொன்ன வேதமென்றோ
அதன் பெயர் பாசமென்றோ
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனின்றி யாருமுண்டோ
அதன் பெயர் பாசமென்றோ
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
கண் திறந்த நாள் முதலாய்
கை கொடுத்த தெய்வமென்றோ
அதன் பெயர் பாசமென்றோ
கண்ணன் பொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பெயர் பாசமென்றோ
No comments:
Post a Comment