Monday, August 9, 2010

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்...

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்



தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க



பொதிகை மலையில் பிறந்தவளாம்

பூவை பருவம் அடைந்தவளாம்

கருணை நதியில் குளித்தவளாம்

காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்





உரிமையில் நான்கு திசை கொண்டோம்

உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்

மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்

முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்



தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்



அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்



ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எந்கள் குலம் என்போம்

No comments:

Post a Comment