Monday, August 9, 2010

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

படம்: 16 வயதினிலே


இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி

 
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு


யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி



கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்

நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்

பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு

பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு

மொத்தம் இருபத்து ஆறு

சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை

இரு வள்ளுவன் பாட்டிலுண்டு

பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே

பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு

சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா

சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா

காக்கையில்லா சீமையே ஏ...



காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே

பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்

சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க

சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க

அட இந்த பக்கம் பாருங்களே

என் கன்னி மனம் கேளுங்களே

அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா

பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்

கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்

கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா

மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு

பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு

என் திறமையை காட்டட்டுமா

இரண்டு சங்கதியை போடட்டுமா

No comments:

Post a Comment