படம் : அபியும் நானும்
பாடல் : வாவா என் தேவதையே..
பாடியவர் : Mathu Balakirushnan
ஆண்: வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....
வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..
பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....
வான் மிதக்கும் கண்களுக்கு.. மயிலிறகால் மை இடவா...
மார்புதைக்கும் கால்களுக்கு.. மணி கொலுசு நான் இடவா... (வா வா என்...)
(இசை...)
ஆண்: செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப் போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
எந்த இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலைப்போல ஒரு
முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே (வா வா என்...)
(இசை...)
ஆண்: பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக்கண்டேன்
தெய்வ மகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
வெளிநாட்டு ஆடைக்கட்டி நடந்த போது
இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் (வா வா என்...)
No comments:
Post a Comment