படம்: ராஜா ராஜேஸ்வரி
பாடகர்கள்: பாலுஜி, டி.கே.கலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: சங்கர் கனேஷ்
http://myspb.blogspot.com/2007/11/562.html
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா
செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா
தங்கத்தில் ஓர் தொட்டில் நான் போடவா
பெற்ற தாய் போல தாலாட்டு நான் பாடவா
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
கல்யாணம் ஊர்கோலம் போகின்றது
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது
கல்யாணம் ஊர்கோலம் போகின்றது
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது
ஈரைந்து மாதத்தில் தாயாகலாம்
தாயென்றாலும் நீ எந்தன் சேயாகாலாம்
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
ஆஆஆஆ...ஆஆஆஆ....ஆஆஆஆ...ஆஆஆஆ..
அண்ணா அண்ணாவென்று யார் சொன்னது
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது
அண்ணாஆஆ அண்ணாவென்று யார் சொன்னது
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது
கண்ணோடு ஒளியாக யார் நின்றது
உன்னை காணாமல் நான் வாழ யார் செய்தது
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்
கண்கள் வளர்வாய்.......கண்கள் வளர்வாய்
No comments:
Post a Comment