Monday, August 9, 2010

என் கண்ணின் மணியே

படம்: ராஜா ராஜேஸ்வரி


பாடகர்கள்: பாலுஜி, டி.கே.கலா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

இசை: சங்கர் கனேஷ்



http://myspb.blogspot.com/2007/11/562.html







என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா

உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா

செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா

உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா

தங்கத்தில் ஓர் தொட்டில் நான் போடவா

பெற்ற தாய் போல தாலாட்டு நான் பாடவா



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



கல்யாணம் ஊர்கோலம் போகின்றது

அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது

கல்யாணம் ஊர்கோலம் போகின்றது

அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது



ஈரைந்து மாதத்தில் தாயாகலாம்

தாயென்றாலும் நீ எந்தன் சேயாகாலாம்



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



ஆஆஆஆ...ஆஆஆஆ....ஆஆஆஆ...ஆஆஆஆ..



அண்ணா அண்ணாவென்று யார் சொன்னது

கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது

அண்ணாஆஆ அண்ணாவென்று யார் சொன்னது

கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது

கண்ணோடு ஒளியாக யார் நின்றது

உன்னை காணாமல் நான் வாழ யார் செய்தது



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

கண்கள் வளர்வாய்.......கண்கள் வளர்வாய்

No comments:

Post a Comment